நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று தனது காதலரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜாக்கி பக்னானியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார். அது நீ தான்.. ரொம்ப மகிழ்ச்சி என் அன்பே…. நீ யாராக இருந்தாய், என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் மாற்றியதற்கு நன்றி.
இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி காட்சிகளுக்கு த்ரிஷா டூப் போடவில்லை…உண்மையை போட்டுடைத்த இயக்குனர்.!
எது செய்தாலும் என்னுடைய அணுமைதியை கேட்டு இருந்ததற்கு நன்றி. நீங்கள் நினைத்தது அத்தனையும் விரும்பி செய்து அதில் வெற்றி பெற நான் விரும்புகிறேன்.. எப்போதும் சிரித்த கன்னத்துடன் இருக்க கேட்டுக்கொள்கிறேன்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் இந்தியன் 2 , அயலான் ஆகிய படங்களிலும், தெலுங்கில் 31 October Ladies Night எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.