வரலாற்றில் இன்று(28.12.2019)… கதிர்வீச்சின் தந்தை பிறந்த தினம்..

  • கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை  ரோண்ட்ஜென்  பிறந்த தினம் இன்று.
  • இன்று மருத்துவ உலகின் மகுடமாக விளங்க்கும் எக்ஸ் ரே கதிரை கண்டுபிடித்த இவரை நினைவில் வைத்து போற்றுவோம்.

இவர், 1845ம் ஆண்டு  மார்ச் மாதம்  27  இல்ஜெர்மனி நாட்டின்  பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு  வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். பின் படித்து முடித்தபின் ,பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது, எனவே  இவரும் இந்த ஆய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய்யின்  பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்மின் கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் பல சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று கண்டறிந்தார்.

Image result for x ray discovered

எனினும் அந்த கதிர்களின்  பண்புகள் தெரியாததால் அதற்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அந்த பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிரை பயன்படுத்தி படமெடுத்தார். இவர்,  ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் 28 டிசம்பர் 1895 அன்று வெளியிட்டார். முதன்முதலில் சனவரி மாதம் 5ம் நாள் 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகையான  ரோண்ட்ஜென் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. இதே போல் அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவர்,  அவரது கண்டுபிடிப்புகளுக்கு ஒருபோதும்  காப்புரிமைகள் கோரியதில்லை. இதேபோல், அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பரிசுத்தொகையை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார். முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தனது இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் 1923 ஆண்டு பிப்ரவரி மாதம்  10ம் நாள்  அன்று குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன. இன்று மருத்துவ உலகின் மகுடமாக விளங்க்கும் எக்ஸ் ரே கதிரை கண்டுபிடித்த இவரை நினைவில் வைத்து போற்றுவோம்.

author avatar
Kaliraj