ஏப்ரலில் ‘சூர்யா 40’ டைட்டில் அறிவிப்பா.?வெளியான சூப்பர் தகவல்.!

சூர்யா நடிக்கவுள்ள 40-வது படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்து தற்போது படத்தின் படப்பிடிப்பானது சூர்யாவின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யா 40 குறித்து புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது சூர்யா 40 படத்திற்கான டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.