மனைவியும் கள்ளகாதலனின் மனைவியும் இணைந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை!திடுக்கிடும் தகவல்!

சென்னை கோயம்பேட்டையை அடுத்த நெற்குன்றத்தில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் ஆவார்.இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி காயத்ரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணாமாக வழக்கு தொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் நாகராஜின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.அதில் காயத்ரிக்கும் நாகராஜனின் நண்பர் மகேந்திரனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இது நாகராஜுக்கு தெரியவந்துள்ளது.இந்நிலையில் நாகராஜ் காயத்ரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.பின்னர் மகேந்திரனையும் கொலை செய்து விடுவதாக எச்சரித்துள்ளார்.இந்த தகவல் மகேந்திரனின் மனைவி பானுவிற்கு தெரியவந்துள்ளது.

இதனால் காயத்ரியும் பானுவும் சேர்ந்து நாகராஜை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகராஜை துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் தலைவாணியால் முகத்தையும் அளித்தியும் கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் காயத்ரியையும் மகேந்திரனின் மனைவி பானுவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

59 mins ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

13 hours ago