நயன்தாரா நம்பர் 1 ஹீரோயினாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.! சக நடிகரின் பதில்.!

நயன்தாரா மட்டுமே சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருபவர், அதனாலேயே ஆணாதிக்கம் மிக்க இந்த சினிமா துறையில் இன்றும் நயன்தாரா நம்பர் 1 ஹீரோயினாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த படம் ஓடிடியில் வெளியாவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது. இதற்கு ஆர். ஜே. பாலாஜி, படம் ஓடிடியில் வெளியாகாது, திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று பதிலளித்துள்ளார். மேலும் இவர் நயன்தாரா குறித்து கூறுகையில், நான் பணியாற்றிய நடிகைகளில் நயன்தாரா மட்டுமே சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருபவர், அதனாலேயே ஆணாதிக்கம் மிக்க இந்த சினிமா துறையில் இன்றும் நயன்தாரா நம்பர் 1 ஹீரோயினாக உள்ளார் என்று கூறியுள்ளார்.