தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது, விடுதிகள் செயல்படவும் அனுமதி கொடுக்கபடுவதாகவும் தமிழக முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது முதலே தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு தளர்வுகளாக தமிழக அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஊரடங்கும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உத்தரவு வெளியாகியுள்ளதுடன், கல்லூரிகளில் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை மீன்வளம் மற்றும் கால்நடை சார்ந்த அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை முதுநிலை வகுப்புகளும் ஏழாம் (07.12.2020) தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் புதிதாக மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி 01.02.2021 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதுடன், அப்பொழுது அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…