வாட்ஸ்அப்-பை நம்ப முடியாது…டிவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட்.!!

வாட்ஸ்அப்பை நம்ப முடியாது என்று டிவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயனர் ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “நான் தூங்கிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது போனில் வாட்ஸ்அப் பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியீட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.


இதனையடுத்து, எலான் மஸ்க் பயனரின் அந்த பதிவிற்கு பதில் அளித்தார். இது குறித்து அவர் டிவிட்டரில் ” வாட்ஸ்அப்பை நம்ப முடியாது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், பயனர் எழுப்பிய கேள்வியின் பதிவை பார்த்த வாட்ஸப் நிறுவனம் ” கடந்த 24 மணி நேரத்தில் புகார் செய்த அந்த பொறியாளரை தொடர்பு கொண்டுள்ளோம்,  அவர்  பிக்சல் ஃபோன் மற்றும் வாட்ஸ் அப்பில் சிக்கலைப் எங்களிடம் பதிவு செய்துள்ளார்.

இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழை என நம்புகிறோம். இது அவர்களின் தனியுரிமை ( Privacy) டாஷ்போர்டில் உள்ள தகவலை தவறாகப் பண்படுத்துகிறது, மேலும் இது குறித்து விசாரித்து சரி செய்யுமாறு கூகுலிடம் கேட்டுள்ளோம்” என அந்த பயனருக்கு பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.