கடவுள் முன்னாடி வந்தால் என்ன கேப்பீங்க.? விஜய் ஆண்டனியின் வித்தியாசமான ஆசை…

ஒரு காலத்தில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி தற்போது படங்களில் இசையமைக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நடிப்பில் களமிறங்கிவிட்டார். அதன்படி, இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது தனக்கு தோன்றும் கருத்துக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்.. நீங்க என்ன கேப்பிங்க? என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர் “இது மட்டும் தான் சார் இங்க பிரச்சன இது இல்லனா எல்லாமே நல்ல இருக்கும் எனக்கு 20 வயது தான் சார் ஆன இந்த உலகம் என் இப்டி இருக்குனு நினைக்காத நாள் இல்ல இந்த ஜாதி மதம் பணம் இல்லாத உலகம் இருந்த நல்ல இருக்கும் ஆன அது கணவுள கூட வராது இதன் உண்மை” என பதிவிட்டுள்ளார். 


மற்றொரு விஜய் ஆண்டனியின் தீவிர ரசிககை ஒருவர் ” கடவுள் என் கண்கள் முன்னாடி தோன்றினால் உங்களோடு வேலைபார்க்கும் தருணத்தை ஏற்படுத்தி கொடுக்கும்படி கேட்பேன் நன்பா” என பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment