தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது கடுமையாக இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்கள் வெயில் மக்களை சுட்டு எரித்து வருகிறது.இதனால் மக்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் கடுமையான வெயில் என்றால் மறுபக்கம் கொல்லும் கொரோனா என்று அசாதாரண சூழ்நிலையை மக்கள் சந்தித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வானிலை குறித்து ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது; அதில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நிலவி வரும் வெப்ப சலனத்தின் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.
இதை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்த ஆய்வு மையம் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்சமாக, 40 டிகிரி செல்ஷியஸ் வரையில் வெயில் பதிவாகும் இவ்வாறு 40 டிகிரி செல்ஷியஸ் இன்றும், நாளையும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், மதுரை மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு வேண்டுகோள்:
மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…