“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” ,என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இதனைத் தொடர்ந்து,சமூக ஊடகங்கள் அதன் கொள்கையின் ஒரு பகுதியாக,கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் தங்கள் தளங்களில் பரப்பப்படுவதை தடை செய்தன.
இந்நிலையில்,கடந்த 2019-ம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உள்ள மூன்று விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற ஆங்கில இதழ் தெரிவித்ததையடுத்து, கொரோனாவின் தோற்றம் குறித்து வந்த முழுமையான விசாரணைக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனமானது சில கொள்கை மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி,கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்தின் காரணமாக,அந்தக் கொள்கையிலிருந்து நீங்குவதாகவும், பேஸ் புக் தளங்களில் பகிரப்பட்ட,கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,பேஸ் புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால்,கொரோனா வைரஸ் தொற்றானது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்லது ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டதாகவே இருந்தாலும்,பேஸ்புக் தனது தளங்களில் வெளியிடப்பட்ட அந்தக் கருத்தை இனி அகற்றாது”, என்று தெரிவித்துள்ளார்.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…