இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம். – பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அந்த வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்து இன்னும் யோசனையில் இருக்கிறது. அதே போல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இன்னும் உறுதியான முடிவை கூறவில்லை. இன்று சென்னையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் நடைபெற்றது.
அது முடிந்ததும் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்க பாஜகவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால், அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தான் இதனை முடிவெடுப்பார்கள் என கூறினார். மேலும், ஓபிஎஸ் – இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்து உள்ளனர். இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம் என கூறினார் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…