ஜி7 நாடுகளை விட அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம்..!-மத்திய அரசு..!

ஜி7 நாடுகளை விட அதிகமான அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு அதனுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 18 கோடி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது ஜி7 நாடுகளான கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசிகளை காட்டிலும் அதிகமாகும்.

ஜி7 நாடுகளில் கனடாவில் குறைந்தபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜப்பானில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இன்னும் ஒரு சாதனையும் படைத்துள்ளது, உலகளவில் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.