நாம் தொலைத்த நாகரீக முறைகள்…! நீடித்த வாழ்வை அளிக்கும் நீராகாரம்….!!!

 

  • இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
  • நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.

முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும்.

இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகளை கண்டுபிடித்த போதிலும், அது நமக்கு பலன் கொடுப்பதில்லை.

 

முதியவர் பட்டம்

30 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தோம் என்றால் 80 அல்லது 90 வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. அக்காக்காலத்தில் 90 வயது முதியவர் கூட இளமை துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தனர்.

ஆனால் இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பழைய சோறு

நமது முன்னோர்கள் எல்லாரும் 90 வயது வரை திடகாத்திரத்தோடு வாழ்ந்தார்களே? அது எப்படி? அது அவர்களின் உணவு முறைகள் தான்.

பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரத்தை, நாம் வீணாக வெளியே கொட்டாமல், அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதனால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரில், வைட்டமின் B6, B12 போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளது.

செரிமானம்

பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீரை தொடர்ந்து குடித்து வந்தால், அஜீரணம், வாந்தி, பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த இந்த உணவு உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது.

தேநீர்

பசியை தடை செய்யும் தேநீர்

தேநீர் நமது வாழ்வில் நன்கு கலந்து விட்ட ஒரு உணவு முறையாகும். ஒரு நாளைக்கு இரண்டு கப் தேநீருக்கு மேல் குடிக்கும் பொது பசி எடுப்பதே தெரியாமல் போய்விடுகிறது.

உடல் எடை அதிகரிப்பு

நமது உடல் எடை அதிகரிப்பதற்கு தேநீரும் ஒரு முக்கிய காரணமாகும். அதிகமாக தேநீர் குடிப்பதால் நமது உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் இதயக்கோளாறுகள், நரம்பு மண்டலா பாதிப்புகள், தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

செயற்கை பானங்கள்

நாம் என்று நமது நாகரீக உணவு முறையான, பழங்கஞ்சி தண்ணீரை குடிக்க மறந்தோமோ, அன்றே நமது ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம். இன்றைய தலைமுறையினர் கைக்கு கிடைக்கும் பலவித பானங்களையும், எந்த வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறியாமல் அருந்தி வருகினறனர்.

இதையும் படிங்க….

 

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

1 min ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

21 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

48 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

55 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago