நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும் என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டியாக களம் காண்கின்றனர். தேர்தல் பரப்புரையில் இறுதி நாளான இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனிடையே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், உங்கள் உழைப்பை ஊர் பேசட்டும், நாம் செய்த நன்மைகளை நாடு பேசட்டும். வெற்றி செய்தி எட்டுத்திக்கும் முழங்கட்டும், தமிழக மக்களின் வாழ்வு செழிக்கட்டும் என கூறியுள்ளனர்.
நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும். இந்த தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் நடைபெறும் போர்க்களம். இதில் நீதி வெல்ல வேண்டும். தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறும் யுத்தம், இதில் தர்மம் வெல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற வேண்டும். சித்ரவதையில் சிக்கி தவித்த சீதையை மீட்ட அனுமனை போல தமிழ் மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என்றும் தமிழ் தாய்மார்களை ஏமாற்றுவதற்காக ஒரு மாய வலையை திமுக வீசி கொண்டியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…