தொடர் மழையால் அதிகரிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.!

தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6,384 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக அதிகரித்துள்ளது.

எனவே தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 28.26 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா விவசாய பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.