குறுவை சாகுபடிக்காக கல்லணையில் ஜூன் 16ல் நீர் திறப்பு!

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 225 ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக, வரும் ஜூன் 16-ம் தேதி கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், கல்லணையில் தூர்வாரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாகவும், அங்குள்ள பயிர்கள் பயன்பெற கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்த அவர், கடைமடை வரை இந்த தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.