திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரையும் ஜனவரி 20ம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் என மனுதாரர் கூறியுள்ளார். நான் BT அசிஸ்டன்ட் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் எனக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
2020ல் தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் எனது மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை எனது பதவி உயர்வுக்கான மனுவை அதிகாரிகள் பரிசீலினை செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றதாக இருவருக்கும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தார் நீதிபதி தண்டபாணி.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…