ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் தனது நண்பர் ஏபி டி வில்லியர்ஸுடன் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது அவர் 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய அனுபவங்கள் பகிரந்துள்ளார். அப்போது அவர் ‘ ஆர்.சி.பி அணியுடன் விளையாடுவதும் சிறப்பாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு என்றார்.
ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே வாளையாடுவேன். என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இதைக்கேட்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…