#Viral:விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் முஸ்லீம் குடும்பம்!

அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.

மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அலிகாரில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், நடைபெற்று வரும் விநாயக சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை அவரது வீட்டில் நிறுவி வழிப்பட்டு வருகிறார்.

ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லீம் பெண், விநாயக பெருமான் மீது கொண்ட அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார். இதனை அவரது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் அந்த பெண் கூறுகையில், “நானும் எனது குடும்பத்தினரும்  விநாயகர் சதுர்த்தியை விழாவை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு பூஜை செய்து மோதகங்களை பரிமாறி வழிபட்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment