Vikravandi [file image]
விக்கிரவாண்டி : தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து, காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10-இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14-ஆம் தேதி துவங்கியது. இதுவரை, மொத்தமாக 64 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழகர் கட்சி சார்பில் அபிநயா, பாமக சார்பில் சி.அன்புமணி, ஆகியோர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. ஜூன் 14-ஆம் தேதி துவங்கிய இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று (ஜூன் 21) -ஆம் தேதி 3 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் 24 ஆம் தேதி இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. அதைப்போல, வரும் 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்.
மேலும், இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்று, தேர்தலுக்கான முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக…
ஆய்வு : மனிதர்களைப் போலவே யானைகளும் மற்ற யானைகளை பெயர் சொல்லி அழைப்பதாக கென்ய நாட்டின் ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. மனிதர்கள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை…
கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம்,…
டீன்ஸ் : இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அடுத்ததாக 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வித்தியாச வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்து…
ஜார்கண்ட்: சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார். ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில்…
பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை…