அந்த நடிகைக்கு கட்டு கட்டா பணம் கொடுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவருடைய படத்தில் வரும் பாடலின் வரியை போல ‘ஏழைகள் வாழ நீ செய்த யாகம்’ போல் அவர் செய்த உதவிகள் மற்றும் அவருடைய பெயர் காலத்தால் அழியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு சாப்பாடு போட்டு மட்டும் உதவி செய்யாமல் பல பிரபலங்களுக்கும் பண ரீதியாகவும் உதவி செய்துள்ளார்.

read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்?

அவர் செய்த  உதவிகளை பற்றி பல பிரபலங்களும் பேட்டிகளில் மனம் திறந்து அவரை பற்றி  பாராட்டி பேசுவது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சில படங்களில் நடித்த நடிகையும், ஒளிப்பதிவாளர் ஜே. வில்லியம்ஸ் மனைவியுமான சாந்தி சமீபத்தில் விஜயகாந்த் செய்த உதவியை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் விஜயகாந்துடன் நரசிம்மா படத்தில் ஒன்றாக நடித்தேன்.

read more- 2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

அவருக்கு அண்ணியாக  கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த சமயத்தில் தான் என்னுடைய கணவர் ஜே. வில்லியம்ஸ்க்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த படத்திற்காக எனக்கு 2 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். ஒரு நாளைக்கு சம்பளம் 10,000 2நாட்களுக்கு 20,000 தான் சம்பளம் கொடுக்கவேண்டும். ஆனால், படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு எனக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒன்று நடந்தது.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

படப்பிடிப்பு முடிந்து மேலாளர் என்கிட்டே வந்து கட்டா பணம்  கொடுத்தார். நான் அதிர்ச்சியாகி என்ன அண்ணா 20,000 தானே சம்பளம் எதற்கு அண்ணா லட்சம் கொடுக்குறீங்க என்று கேட்டேன். பிறகு இது எனக்கு கொடுக்கவேண்டிய பணம் இல்லை வேறு யாருக்கோ நீங்க கொடுக்கவேண்டிய பணம் அவுங்களுக்கு கொண்டு போய் கொடுங்க என்றும் சொன்னேன். அதற்கு மேலாளர் இல்லை உங்களுக்கு தான் இந்த பணம் என்று சொன்னார்.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

விஜயகாந்த் தம்பி தான் உங்களுக்கு கொடுக்க சொன்னார் என்று கூறினார். நானும் மேலாளரும் இதனை  பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது விஜயகாந்த் ஒரு காரில் வந்து இறங்கி என்ன அங்க சத்தம் என்னாச்சு அண்ணா என்று மேலாளரிடம் கேட்டார். அதற்கு மேலாளர் பணம் கொடுத்தா இந்த பொண்ணு வாங்க மாட்டிக்குது என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் பணம் வாங்கிக்கோங்க என்று கூறினார்.

read more- ஒரே ஒரு படம் தான்! சினிமாவை விட்டே தப்பியோடிய குணா பட நடிகை?

நான் பயந்து இல்லை பணம் அதிகமாக இருக்கிறது என்று செய்கை காட்டினேன். பரவாயில்லை செலவுக்கு வைத்து கொள்ளுங்கள் என்று கூறினார். என்னுடைய கணவர் உடல் நிலை சரில்லாமல் இருக்கும் தகவலை தெரிந்துதான் அவர் இவ்வளவு பணம் கொடுத்து எனக்கு உதவி செய்தார்” எனவும் நடிகை சாந்தி தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment