Categories: Uncategory

திருநெல்வேலி முதல் இங்கிலாந்து வரை விஜய் சங்கரின் சாதனை !

விஜய் சங்கர் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையுள்ள ஆல்ரவுண்டர்களில் ஒருவர். இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை கிரிக்கெட்டை சுற்றி தான் இருந்துள்ளது. இவரது தந்தை மற்றும் அவரது அண்ணன் இருவருமே தமிழ்நாடு அணிக்காக விளையாடி உள்ளனர்.   ரஞ்சி கோப்பையில் 2014 -15 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி உள்ளார். அப்போது 111, 82, 91 ,103 என வரிசையாக நல்ல விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் கொஞ்சம் லேட்டாக தான் இடம் கிடைத்தது.
ஆனால் ஐபிஎல் போட்டியில் 2014-ம் ஆண்டு முதல் உள்ளார். 2014 -இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுஇருந்தார். அதன் பிறகு 2016 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். அப்போது இவர் அடித்த 63 ரன்கள் இவரது ஐபிஎல் உயர்ந்தபட்சக் ஒன்றாகும்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டில் டெல்லி அணியில் விளையாடி உள்ளார். கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு ஆதரவாக களம் இறங்கினார். இவர் இந்தியாவிற்காக தனது முதல் ஒருநாள்  கிரிக்கெட்டை இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கினார்.
டி-20 போட்டியில் 2018 மார்ச் மாதம் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய அணியின் மத்திய பேட்டிங் தரவரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். நம்பிக்கையுள்ள பந்துவீச்சாளராகவும்  திகழ்கிறார். இதனால் இந்திய அணியில் நம்பிக்கை உள்ள ஆல்-ரவுண்டராக தற்போது இருக்கிறார் .

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தவானுக்கு காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில்நேற்று நடந்த உலக கோப்பையில் முதலில்  களமிறங்கிய இந்திய அணி  இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.

நேற்றைய  போட்டியில் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் நான்காவது பந்துவீசும் போது கால் தடுமாறியதால் புவனேஷ்குமார் வெளியேற அவருக்கு பதில் விஜய் ஷங்கர் மீதமுள்ள 2 பந்துகளை வீசினார். அப்போது முதல் பந்தில் இமாம்-உல்-ஹக் விக்கெட்டை பறித்தார்.
பின்னர் 35 -வது வீசியபோது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தார்.இப்போட்டியில் 5.2 ஓவர் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை பறித்தார்.இதனால் இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தது.
 

murugan

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

4 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

9 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

9 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

9 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

10 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

10 hours ago