பெண்களை இழிவுசெய்யும் “மனுதர்மம்” நூலைத் தடைசெய்க – விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்!

பெண்களை இழிவுசெய்யும் “மனுதர்மம்” என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய கோரிக்கை விடுத்து விசிக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெண்களை காலம் காலமாக இழிவுபடுத்தி, பெண்கள் படிக்கக்கூடாது, வேலைபார்க்கக்கூடாது, ஆண்களை விட பெண்கள் எல்லாவற்றிலும் குறைவானவர்கள், அவர்களுக்கு எல்லாவிதமான தகுதியும் கிடையாது என்று மனுதர்மம் நூல் தெரிவிப்பதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “மனுதர்மம்” சனாதன நூலைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் சென்னை மட்டுமின்றி, தமிழகமெங்கும் உள்ள பல பகுதிகளில் மனுதர்மம் சனாதன நூலைத் தடைசெய்ய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.