இனிமேல் கோவிஷீல்ட் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை அழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்து அரசு இந்தியாவில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தடுப்பூசி போடாத நபர்களாக கருதப்பட்டு பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு தான் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடு கடந்த அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே இதனால் சற்று பிரச்சினை நீடித்து வந்தது. இதனை அடுத்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்து வரும் 14ஆம் தேதி முதல் இரு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப் பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…