இந்தியா தனது எல்லை பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த மேற்கொள்ளும் கட்டமைப்பு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே, சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது,” என, அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- சீனாவுடனான எல்லை பகுதியில் இந்தியா தனது கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, இந்திய அரசு, பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளால், தங்கள் ஆதிக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சீனா கருதுகிறது. இதனால், இந்தியாவின் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, எல்லை பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. சீன ராணுவம், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டது. ஆனால், இந்திய ராணுவம் கட்டமைப்பு பணிகளை துவக்குவதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபடுகிறது. நல்ல நட்புறவுடன் கூடிய அண்டை நாடாக செயல்பட சீனா மறுக்கிறது. சீனாவுக்கு எதிராக, அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாம் ஓரணியில் திரளுவதற்கு இது தான் சரியான நேரம் என்று ஆவேசமாக கூறினார்.
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…