இன்று நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்த UPTET தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்துள்ளது. இதனால், இரண்டு ஷிப்ட்டுகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் ஷிப்ட காலை 10 மணி முதல் 12:30 மணி வரை 2554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை 1754 மையங்களில் நடைபெற இருந்தது. காகிதம் கசிந்த செய்தி வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் எஸ்டிஎஃப் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பிறகு பிரயாக்ராஜ், மீரட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் பலர் பிடிபட்டனர்.
லக்னோவில் இருந்து 4 பேர், ஷாம்லியில் 3 பேர், அயோத்தியில் 2 பேர், கௌசாம்பியில் 1 பேர் மற்றும் பிரயாக்ராஜில் 13 பேரை எஸ்டிஎஃப் ( STF) போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாநிலத்தைச் சேர்ந்த 13,52,086 பேர் தேர்வெழுத உள்ளனர். உத்தரபிரதேச அரசு ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வை நடத்தும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்தார். இருப்பினும், மறுதேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இதற்காக, விண்ணப்பதாரர்கள் updeled.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பைப் பார்க்க வேண்டும். முன்னதாக, 2019 இல் நடைபெற்ற UPTET தேர்வில் 16 லட்சம் விண்ணப்பதாரர்களும், 2018 இல் நடைபெற்ற தேர்வில் சுமார் 11 லட்சம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்து இருந்தனர். முதல் முறையாக UPTET தேர்வில் 13 லட்சம் தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…