சந்திரயான் 3 ஏவுதலைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர், ‘இஸ்ரோவின் பேலோடுகள் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகள், பெருமை மற்றும் நம்பிக்கையை சுமந்து செல்கிறது. சந்திரயான்-3 ஏவுதல் நம் அனைவரின் இதயங்களையும் பெருமிதத்தால் பெருக்குகிறது. அயராத முயற்சிக்கு நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள். ஜெய் ஹிந்த்’ என்று ட்வீட் செய்துள்ளார்.
ISRO’s payloads carry the dreams, pride and belief of 1.4 billion Indians. Chandrayaan-3 launch swells all our hearts with pride. Congratulations to all our scientists for their untiring efforts. Memorable day for all Indians. Jai Hind! ????????????#Chandrayaan3 pic.twitter.com/VAwTWXAn9y
— Sachin Tendulkar (@sachin_rt) July 14, 2023