எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாபாரியின் எடை இயந்திரத்தை தூக்கி வீசியதால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்ற பகுதியில் வசித்து வருவபர் ராஜா இவர் குளிர்பானம் மற்றும் மளிகைக் கடை ஆம்பூரில் நடத்திவருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, மேலும் ஊரடஙகை மீறி நேற்று மாலை நேரத்தில் ராஜா தனது கடைகளை திறந்துவைத்தார்.

இந்நிலையில் உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்குள் சென்று அந்த கடையில் இருந்த ஒரு எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கிவீசி எரிந்தார். இதனால் எடை இயந்திரம் உடைந்து சேதமானது.

மேலும் ரகுராமன் எடை இயந்திரத்தை தூக்கி வீசிய காட்சி அங்குள்ள காணொளியில் பதிவானது, இதனால் திருப்பத்தூர் மாவட்டம் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ரகுராமனை ஆயுதப்படைக்கு திருப்பி அனுப்பிவிட்டு, நேரில் சென்று எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை கடையில் உரிமையாளர் ராஜனுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.