போக்குவரத்துக்கு விதி மீறல்கள் – வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது.
வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என சட்டத்தில் உள்ளது. இத்துடன் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை முன் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடியவர்களுக்கு 100 முதல் 200 தினார் வரை அபராதமும், இரண்டு மாத சிறை தண்டனையும் அனுமதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றொரு நபரின் வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின் கீழ் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தின் போது சேதத்தை விபத்தின் மூலம் ஏற்படுத்துதல், குறைபாடுள்ள வாகனத்தை தெரிந்தே ஓட்டுதல், சரியான போக்குவரத்து பாதைகளில் ஓட்டாமல் தாறுமாறாக ஓட்டுதல் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், உயர் மின் விளக்குகளை பயன்படுத்துபவர்கள், அதிக சத்தம் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் 50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Rebekal

Recent Posts

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

10 mins ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

23 mins ago

அம்மா சோனியா காந்தி கோட்டையில் மகன் ராகுல் காந்தி போட்டி.! பிரியங்காவுக்கு ‘நோ’.!

Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…

32 mins ago

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

4 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

5 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

11 hours ago