அமெரிக்காவின் அலபாமாவில் வீசிய சூறாவளி, 6 பேர் பலி.!

அமெரிக்காவின் அலபாமாவில் வீசிய சூறாவளியால், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு பகுதியான அலபாமாவில் வீசிய பயங்கர சூறாவளியால், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு அமெரிக்கா முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சூறாவளிகள் வீசியுள்ளதாக, தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜோர்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் வடக்கு கரோலினாவில் இன்னும் சூறாவளிக்கான எச்சரிக்கை அகற்றப்படவில்லை. மேலும் இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர், மற்றும் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சேம்பர்ஸ், கூசா, எல்மோர் மற்றும் தல்லாபூசா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் புயலுக்கான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அலபாமா கவர்னர், புயலில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment