இந்திய ஆன்மீகவாதி சுவாமி சின்மயானந்தாவின் நினைவு தினம் இன்று….!

உலகெங்கிலும் ஆன்மிக வேதாந்த கருத்துக்களை பரப்பிய சுவாமி சின்மயானந்தா அவர்களின் நினைவுதினம் வரலாற்றில் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுவாமி சின்மயானந்தா என்பவர் 1916 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் எனும் பகுதியில் பூதம்பள்ளி என்னும் இடத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ணன். இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து, அதன் பின்பாக ஊடகவியல் துறையில் பணியாற்றி உள்ளார். இதன்பின் இந்திய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக பணிகளை செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் இவர் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார்.

அதன்பின் பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இவர், இந்து சமய ஆன்மீக துறையில் அதிக அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று பாலகிருஷ்ணன் சந்நியாச தீட்சை பெற்று சுவாமி சின்மயானந்தா எனும் பெயரைப் பெற்றுள்ளார். இவர் இமயமலையில் உள்ள சுவாமி தபோவன மகாராஜ் என்பவரிடம் எட்டு ஆண்டுகள் இந்துத்துவ தத்துவத்தை பயின்றுள்ளார்.

இவர் அதன் பின் பல இடங்களில் ஆசிரமங்கள் அமைத்துள்ளார். சின்மயா மிஷன் எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலமாக உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பி புகழ் பெற்றவர் தான் சுவாமி சின்மயானந்தா. இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி 1993ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உயிரிழந்தார். ஆனால் இவரது சீடர்கள் இவர் அந்த இடத்தில் மகா சமாதி அடைந்ததாக கூறுகின்றனர்.

Rebekal

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

6 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

7 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

9 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

9 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

10 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

10 hours ago