இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற யொகான்னசு வில்லெம் யென்சென் பிறந்த தினம் இன்று..!

யொகான்னசு வில்லெம் யென்சென் டென்மார்க்கை சேர்ந்த ஒப்பற்ற எழுத்தாளர் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள வடக்கு யூட்லேண்டில் இருக்கக்கூடிய கிராமத்தில் 20 ஜனவரி 1873 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மாவட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் வீட்டிலேயே தனது தாய் கற்பிக்க 11 வயது வரை பயின்றுள்ளார். பின்னர் கெதாட்டிரல் ஸ்கூல் ஆஃப் விபோர்க்கில் படித்துள்ளார்.

இவர் 1893-ஆம் ஆண்டு தனது பட்டப் படிப்பை முடித்து, கோபன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் அறிவியலின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இங்கு 3 ஆண்டுகள் பயிற்சிபெற்ற நிலையில் நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இவரது ஆர்வம் படைப்புக் களத்தில் திரும்பி உள்ளது. அதனால் அப்போது முதல் படிப்பை விட்டு எழுத தொடங்கியுள்ளார். இவருக்கு 1944 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.