அண்மையில் திருநெல்வேலியை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. திருநெல்வேலி நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் அவரது சமூகத்தை சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதியை காதலித்து, பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இதன் பின்னர் காதல் திருமண ஜோடி திருநெல்வேலி டவுனில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர், வான்மதி சகோதரர் சமாதானம் பேச அழைத்து வர சொன்னதாக முத்துபாண்டியன் என்பவர் நம்பிராஜனை அழைத்து சென்றார்.
இதனை அடுத்து அங்கு முத்துபாண்டியனுடன் நம்பிராஜன் சென்றார். அந்த இடத்தில வான்மதி சகோதரர் செல்லசாமி, செல்லத்துரை, முருகன், ஆகியோர் ஆயுதங்களுடன் இருந்துள்ளனர். இதனை கண்ட நம்பிராஜன் தப்பி ஓட முயற்சித்த போது, நம்பிராஜனை அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக்கொன்றது. பின்னர் அந்த உடலை ரயில் தண்டவாளத்தில் கொண்டு போட்டுவிட்டனர்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, தப்பியோடிய செல்லசாமி, செல்லத்துரை, முருகன், முத்துபாண்டியன் ஆகியோரை போலீசார் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர். இவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதில் வான்மதி சகோதரர் செல்லசாமி கூறிய அறிக்கையில், ‘ எனது தங்கை வான்மதியை காதலிப்பதாக நம்பிராஜன் சுற்றி வந்தான். அவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கின்றன. இதனை சுட்டிகாட்டடி, எனது தங்கையிடமும் கூறினேன். ஆனால், நம்பிராஜன், ‘நான் உன் தங்கையை தூக்கிகொண்டு தாலி காட்டுவேன்’ என சவால் விடுத்தான். அப்படி செய்தால் உன் தலையை வெட்டிவிடுவேன் என நான் கூறினேன். சொன்னபடி என் தங்கையை திருமணம் செய்துகொண்டான்.அதனால் நான் கொலை செய்துவிட்டேன்.’ என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…