பிரான்சில் மூன்று போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை.!

பிரான்ஸ் நாட்டில் மூன்று போலீஸ் அதிகாரிகளை, ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் ஒரு குடும்ப வன்முறை சம்பவத்துக்காக காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது. அதாவது, புதன்கிழமை நேற்றய தினம் செயின்ட்-ஜஸ்ட் என்ற கிராமத்தில் நடந்த குடும்ப வன்முறை சம்பவத்தால், அந்த பெண், வீட்டின் கூரைக்கு மேல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அந்த குற்றவாளி வீட்டுக்கு தீ வைத்துவிட்டு, அங்கு வந்த மேலும் இரண்டு போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்றுள்ளார். இதன் பின் கூரை மீது ஏறிய பெண்ணை காவல்துறை பாதுகாப்பாக மீட்டனர். 48 வயதான அந்த சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, குழந்தைகளை அடைத்துவைத்த ஒரு விவகாரத்தில் அந்த குற்றவாளியை போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது.

காவல்துறை கூறுகையில், அந்த வீடு எரிந்துவிட்டதாகவும், குற்றவாளி உள்ளே இருக்கிறாரா, தப்பிவிட்டாரா என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மனின் பின்னர் சந்தேக நபர் இறந்து கிடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் தனது காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து, துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்த மூன்று போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். 21 வயதான பிரிக் அர்னோ மவெல், லெப்டின் சிரில் மோரல் மற்றும் அட்ஜூடண்ட் ரமி டுபுயிஸ் 37 ஆகிய மூன்று போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

51 mins ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

7 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

8 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

9 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

10 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

10 hours ago