இந்தியா, சீனா எல்லைப்பதற்றம்.. எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள முப்படைகள் தாயார்- பிபின் ராவத்!

இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பு கடந்த திங்கட்கிழமை அன்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஆஜராகினர். அப்பொழுது இந்தியா, சீனா இடையே தொடரும் பதற்றத்தை எதிர்கொள்ள எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தை தணிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எத்தகைய நடவடிக்கையையும் எதிர்க்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.