அரண்மனை – 3 படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் இதுதானாம்.! ஷாக்கில் ரசிகர்கள்.!

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா பேயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்து
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யாவும் , ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

பேய் படங்கள் என்றாலே பெண்கள் தான் பேயாக நடிப்பது வழக்கம். ஆனால் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தில் பேயாக ராகவா லாரன்ஸ் நடித்திருப்பார். அதே போன்று அரண்மனை 3 ல் ஆர்யா பேயாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக சாக்லேட் பாயாக நடித்த ஆர்யா தற்போது இ பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.