தேசிய கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை.! சேலத்தில் சீமான் பேட்டி!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அதில், பாஜக, காங்கிரஸ், காவிரி விவகாரம் , நீட் தேர்வு முதல் லியோ பட ரிலீஸ் பிரச்சனை வரை  தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார் சீமான்.

தேசிய கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது, இந்தியாவில் தேசிய கட்சி என்று ஒன்று இல்லவே இல்லை. தேசிய கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே மாநில அளவில் ஒரு கொள்கையை வைத்து தான் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் ஐபிஎஸ் பணியாற்றிய அண்ணாமலை கர்நாடகாவில் பாஜக மாநில தலைவராக முடியாது.

அரசு இயந்திரமா..? செய்தி தொடர்பு நிறுவனமா..? – அண்ணாமலை 

அதே போல, தமிழக மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியை கர்நாடகா மாநில முதல்வராக மாற்ற முடியுமா.? ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே நிலைப்பாடு என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும் என விமர்சித்தார். தமிழக விவகாரங்களில் இன்னும் முதல்வர் கடிதம் தான் எழுதுகிறார் எனவும் சீமான் விமர்சனம் செய்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, காவிரி நீரை தர மறுக்கிறார்கள். அவர்களோடு, தமிழகத்தில் குறைந்தபட்சம் கூட்டணியைவாது முறித்துக்கொள்ளுங்களேன் என விமர்சனம் செய்து இருந்தார். அடுத்து நீட் தேர்வு பற்றி பேசுகையில், நீட் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று . நீட் தேர்வு வெற்றி பெற்று கல்லூரிக்கு சென்றால் அங்கு நீட் தேர்வு எழுதாத பேராசிரியர்கள் தான் படம் நடத்த உள்ளனர். நீட்டிற்கு முன்னர் உள்ள பாடத்திட்டம் தான் இருக்கிறது எனவும் , குறைந்தபட்சம் தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடு அறிவித்தது போல நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தெலுங்கானா மாணவர்கள் தான் தெலுங்கானா மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்றது போல தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.

அடுத்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள லியோ படம் பற்றி பேசுகையில், விஜயின் முந்தைய படத்திற்கு இது போல பிரச்சனை வந்ததில்லை, ஜெயிலர் படத்திற்கு வரவில்லை. லியோவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் வெளியீட்டுக்கு கொடுத்தால் இசைவெளியீட்டு விழா நடந்திருக்கும். பிரச்சனை இல்லாமல் படம் ரிலீசாகி இருக்கும்.

விஜய் கட்சி ஆரம்பிக்க போகிறார். அரசியலில் இறங்க உள்ளார் என்கிற பயம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் எனவும் சீமான் இன்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

6 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

22 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

33 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

36 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago