செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவில் உருவாக்கப்பட்ட கட்சியை கவிழ்ப்பதற்கு, அன்றைக்கு எட்டப்பன் இருந்தார். இன்றைக்கு செந்தில் பாலாஜி இருக்கிறார். அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறார். அவரது கனவு ஒருபோதும் நினவாகாது என்று தெரிவித்துள்ளார்.
என்றைக்கும் தர்மம், நீதி, உண்மை இதுதான் வென்ற சரித்திரம் உண்டு, அதர்மம் என்ற சரித்திரம் கிடையாது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஏமாற்றுவதில் கில்லாடி என்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பல பொய்கள் சொன்னவர் எனவும் விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜி இதுவரை மொத்தம் 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார். அடுத்து எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர் ஐஎஸ்ஐ முத்திரை, அவர் போலி என்றும் கூறியுள்ளார்.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…