ஆன்டிபாடிகளை உருவாக்கும் “அப்பளம்” கொரோனாவுக்கு எதிராக போராடும் – மத்திய அமைச்சர்

மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால்  ‘பாபி ஜி’  (பாப்பாட்) என்ற பிராண்டை தொடங்கி வைத்தார்.  

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்:

மத்திய அமைச்சரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் ஒரு பாப்பாட் என்ற  பிராண்டை அறிமுகப்படுத்தினார்.  ஆத்மிர்பர் பாரத் அபியான் முயற்சியின் கீழ் தயாரிக்கப்பட்டு ‘பாபி ஜி’ பாப்பாட் எனற அப்பளம் பிராண்ட் தொடங்கப்பட்டுள்ளது.

பாப்பாட் என்றால் அப்பளம் தான் அங்கு அதே ‘பாப்பாட்’ என்று அழைப்பர். இந்த பாப்பாட்டில் ஆன்டிபாடிகள் உருவாக்க உதவும் பொருட்கள் உள்ளன என்றும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத்  உதவும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பாப்பாட் உதவியாக இருக்கும் என்று அர்ஜுன் ராம் கூறினார்.

அர்ஜுன் ராம் மேக்வால் நீர்வளம், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி மற்றும் நாடாளுமன்ற மாநில அமைச்சராக உள்ளார்.

பப்பாட் தயாரித்த நிறுவனம் பிகானேரைச் சேர்ந்தது. மேலும் தயாரிப்பில் ‘gilloy ‘மற்றும் பிற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் இதில் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.