தியேட்டர் உரிமையாளர் இடதகறாரில், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில், பழனிசாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியத்தின் தொடையிலும், குண்டுகள் பாய்ந்து உள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனிசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்நிலையில், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், நடராஜனை கைது செய்துள்ளனர்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…