காதலனை சுட்டுக்கொன்ற காதலியின் சித்தப்பா..!

ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா கிராமத்தை சேர்ந்தவர் மது மேலும் இவரை போல் அதே கிராமத்தில் வசித்து வருபவர் 17 வயதுடைய ஒரு பெண் , இந்த நிலையில் இவர்கள் இருவருக்கு மிடையே காதல் நிலவில் காதல் ஏற்பட்டுள்ளது மேலும் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணை மது வெளியூருக்கு கடத்தி சென்றார் மேலும் கடத்தி சென்று அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மது அந்த பெண்ணை கடத்தி சென்றதால் பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர் அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் இருந்து வெளிவந்து மது அவருடைய காதலி வீட்டிற்கு சென்றுள்ளார் , அங்கு சென்று அந்த பெண்ணை திருமணம்செய்து கொடுக்க கேட்டுள்ளார் ஆனால் அவரது பெற்றோர்கள் மறுத்து விட்டனர் ஆனாலும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி மது தொடர்ந்து வற்புறுத்தி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அப்பொழுது அந்தப் பெண்ணுடைய சித்தப்பா ரூபேஸ் என்பவர் அங்கு வந்துள்ளார் வந்து வாக்குவாதம் நடத்தி அவரை அங்கிருந்து போக சொல்லியிருக்கிறார் ஆனால் மது போகவில்லை உடனடியாக கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மது மார்பில் சுட்டுவிட்டார், இதனால் குண்டு மார்பில் துளைத்த மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், அதன் பிறகு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ருபேஷை தேடிவருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.