மீண்டும் ஜன கன மன படத்திற்கு வந்த சோதனை.!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களிற்கு முன்பு கலந்துகொண்டார் படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வந்தது.

இந்த ஜன கன மன படத்தில் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹாலிவுட் அளவிற்கு சண்டைக்காட்சி இடம்பெறும் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இந்த படத்தில் பணியாற்றிவருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பை படமாக்க படக்குழுவினர் வெளி நாடுகளில் சென்று எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் படத்திற்கான படப்பிடிப்பை முழுவதுமாக படக்குழுவினர் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.