ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு வந்த சோதனை…!! படப்பிடிப்பு நிறுத்தம்..!

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில்  ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு 15 நாட்கள் மீதமுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் பிரச்சனை முடிந்த பிறகு தான் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் 13 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி சென்றதால் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.