உடலை மசாஜ் செய்யவும், துணிகளை துவைக்கவும் சீனியர்கள் என்னை வற்புறுத்தினார்கள்- டூட்டி சந்த்

ஒடிசாவில் பிறந்த ஒலிம்பிக் வீராங்கனை டூட்டி சந்த், 2006-08 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது,சீனியர்களால் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அதிவேக பெண் ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த்.இவர் புவனேஸ்வரில் உள்ள விளையாட்டு விடுதியில் இருந்தபோது, தனது சீனியர்கள் உடலை மசாஜ் செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் துணிகளைத் துவைக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் “நான் அவர்களை எதிர்த்தபோது, அவர்கள் என்னை துன்புறுத்தினார்கள்,இது என்னை மனதளவில் பாதித்தது,” என்று டூட்டி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் 19வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது சீனியர்களால் ராக்கிங் செய்யப்பட்டதால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதற்கு சமூக வலைத்தளத்தில் பதில் அளிக்கும் போது சந்த் தனக்கு நடந்த நிகழ்வை கூறியுள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள விளையாட்டு விடுதியின் அதிகாரிகள், சந்த் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment