சென்னை தியாகராய நகரில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் பேசுகையில், நேற்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்டத்திற்கான திரைப்பட வினியோகஸ்தர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பதவி ஏற்றதாக தெரிவித்தார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்நிலையில், திரையுலக வாழ்க்கையில் 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படம் வந்தாலும் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அன்று வர்தகசபை வாசலில் நின்று ஜி.எஸ்.டி வரி எதிர்த்து போராடினேன். மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்த பிறகு மாநில அரசு கேளிக்கை வரியை எதற்காக விதிக்கிறது என்று கேள்வி எழும்பினேன். இந்திய அளவில் இல்லாதவாறு 8% சதவீதம் கேளிக்கை வரி மக்களை வாட்டி வதக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு மற்றும் திரைப்படத் துறையில் இருப்பவர்களை எங்களை எதிராகவும், உதிரியாகவும் எண்ணக்கூடாது. திரைப்பட திரையரங்குகள் மூட வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்களில் ஆளும் கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களை வென்று வருகிறது. இப்போது, மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவு என்பது ஒரு எச்சரிக்கை , அபாய சங்கு, அபாய மணி என்றும், பின்னர் என்னால் இது மட்டும் தான் சொல்ல முடியும் என கூறினார். பின்பு ஊதி கொண்டிருக்கிறாய் அபாய சங்கு இந்த தேர்தலில் ஏற்றுக் கொள்ளவில்லை நான் பங்கு என்று சொல்லி இதை டபுள் மீனிங்ல கூட எடுத்துக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் அரசியலிலுக்கு அதிஷ்டம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…