ஒலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா கிராமத்திற்கு கிடைத்த சாலை..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லவ்லினாவின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகெயின் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை தற்போது உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தினால் இவர் சொந்த ஊர் திரும்பும்போது தார் சாலையில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலத்தின் கோல்கேட் மாவட்டத்தில் உள்ள பாரமுதியா கிராமத்தை சேர்ந்தவர் லவ்லினா.  இவரது கடின உழைப்பால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தால் இவருடைய இல்லத்திலிருந்து பாரமுதியா கிராமம் வரையிலான 3.5 கி.மீ தொலைவு வரை தார் சாலை அமைக்கவுள்ளனர்.

மேலும் இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் தெரிவித்துள்ளதாவது, ஒலிம்பிக்கிலிருந்து தாயகம் திரும்பும் லவ்லினாவிற்கு நாங்கள் பரிசளிக்கும் விதமாக அவரது கிராமத்தின் சாலையை சீரமைத்து வருகிறோம். லவ்லினா தங்கம் வென்று இந்தியா திரும்ப வேண்டும் என்று அசாம் மக்களும், நாட்டில் உள்ள எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்.

இதன் மூலமாக இவரது கிராமத்திற்கு அடிப்படையான விளையாட்டு கட்டமைப்புகள் இவ்விடத்தில் உருவாக்கப்படும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.