மும்பை : ரிக்ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை கடுமையாக ரிக்ஷா ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதலில் திருநங்கை சென்று கொண்டிருந்தபோது ரிக்ஷா ஓட்டுநர் பணம் கேட்பது போல தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வேகமாக வந்த திருநங்கை ஓட்டுநர் கன்னத்தில் வேகமாக அடித்தார். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கீழே விழ சென்றார். திருநங்கை அடிக்க ஆரம்பித்ததால் வாக்குவாதம் முற்றியது. எனவே, ஓட்டுனர், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்று அவரும் தாக்குதலில் ஈடுபட்டார்.
அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சண்டையை தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் தங்களுடைய போனை வைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். சண்டை மிகவும் பெரிதான காரணத்தால் கோபத்தில் அந்த திருநங்கை தனது உடையை கிழித்துக்கொண்டு ஓட்டுனரை கடுமையாக தாக்கினார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒரு பெண் என்று சமூக வலைதளங்களில் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது, ஆனால், அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று சமூக வலைதளவாசிகள் கருத்துக் கூறி வருகின்றனர். இன்னும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய சரியான விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவம் மும்பையில் நடந்தது மட்டும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவருக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை . மேலும், இந்த செய்தியையும், வீடியோவையும் freepressjournal என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில்…
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று…
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…