விறு விறுவென இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசாசு 2.!

பிசாசு 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கடந்த 2011-ம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு. திகில் நிறைந்த கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்றது. நல்ல வசூல் சாதனையும் செய்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த பிசாசு -2 படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மேலும் நேற்று பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு  90% முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்னும் 10 % படப்பிடிப்பில் ஒரு பாடல் படமாக்க படமாக்கப்படவுள்ளது. இது முடித்துவிட்டால் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.