கனடாவில் ஒரே இரவில் தலைகீழாக மாறிய நால்வரின் வாழ்க்கை.!

கனடாவில் ஒரே இரவில் நான்கு பேர் இணைந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்

உலகில் உள்ள அனைவருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும் . அதுவும் நோகாமல் என்றால் இன்னும் சந்தோஷம் தான் . அதற்காக பலரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறார்கள் . அடித்தால் அதிர்ஷடம் தான் .ஒரு சிலர் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து லாட்டரி டிக்கெட்டை வாங்குவார்கள் .

அந்த வகையில் கனடாவில் உள்ள 4 பேர் ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். கனடாவின் கொலம்பியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் நான்கு பேர் லாட்டரி டிக்கெட்டை இணைந்து வாங்கியுள்ளனர் . அவர்கள் எதிர்ப்பார்க்காத விதமாக அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 6 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை அடித்துள்ளது .அதன் படி நால்வரும் ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆகி வாழ்க்கை மாறிய சம்பவம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது .