இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கே.எல் ராகுல் 52 , ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் அடித்தனர்.
பங்களாதேஷ் அணியில் ஷபியுல் இஸ்லாம் , சவுமியா சர்க்கார் இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 175 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இதில் வங்கதேச அணியில் முஹம்மது நைம் மட்டும் தனியாளாக போராடினார். அவர் 48 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அடுத்ததாக முகமது மிதுன் 27 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக இறுதியாக 19.2 ஓவரில் பங்களாதேஷ் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 6 ,சிவம் துபே 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…